Thursday 27 March 2014

வையகம்


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா

விழுந்தாரை கண்டால் வாய்விட்டு சிரிக்கும்
வாழ்ந்தரை கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவர் கேட்டால் நடிப்பென மறுக்கும்
பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாலே யாவும் மறைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாரி நடந்தே பகைமையை வளர்க்கும்

படம் - நான்பெற்றசெல்வம்
பாடலாசிரியர்- ஷரீப்

No comments: